TNPSC Thervupettagam

ஐவர்மெக்டின்

May 15 , 2021 1520 days 647 0
  • ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டினைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க உள்ளதாக இரண்டு இந்திய மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
  • மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது அளவை மிஞ்சி அதிகரித்து வருவதால் இந்தத் தீவிரமான கோவிட்-19 தொற்றிலிருந்துப் பாதுகாத்து கொள்வதற்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
  • கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • மருத்துவ சோதனைகளைத் தவிர்த்து ஐவர்மெக்டின் மருந்தினை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார அமைப்பானது பரிந்துரைத்துள்ளது.
  • இந்த மருந்தின் செயல்திறனை நிரூபிப்பதற்கு போதுமான எந்தவொரு தகவல்களும் முறையான சான்றுகளும் இல்லை என்பதால் இந்த மருந்தை உபயோகிக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
  • ஐவர்மெக்டின் மருந்தானது ஆன்கோசெர்சியாசிஸ் மற்றும் ஃபைலேரியாசிஸ் (Onchocerciasis and filariasis) ஆகிய இரு உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்