இந்தியாவின் 9 மாநிலங்களில் ‘ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்திய 9 மாநிலங்கள் கோவா, ஆந்திரா, ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் குஜராத் ஆகியன ஆகும்.
இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலிருந்தும் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்க முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய பயனாளி மாநிலம் உத்தரப் பிரதேசமாகும்.
அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை இந்தத் திட்டத்திற்கான முதன்மைத் துறையாகும்.