சிக்கிம், ஒடிசா மற்றும் மிசோரம் ஆகிய மேலும் 3 மாநிலங்களும் ஒருங்கிணைந்தப் பொது விநியோக அமைப்பு (PDS - Public Distribution System) மேலாண்மை முறையில் சேர்ந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த PDS மேலாண்மை முறையின் மூலம், இந்திய அரசானது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயன்களைக் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகின்றது.
இந்தத் திட்டமானது நாட்டில் எந்தவொரு இடத்திலும் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை இந்தத் திட்டமானது 17 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களும் இந்தத் திட்டத்தில் இணைய இருக்கின்றன.