இந்தியத் தலைமை நீதிபதி (CJI) ‘ஒரு வழக்கு ஒரு தரவு’ முயற்சியையும், ‘சு சஹாய்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு உரையாடல் மென் பொருளையும் (chatbot) தொடங்கி வைத்தார்.
இது, இந்திய நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலுமுள்ள நீதித்துறைத் தகவல்களை ஒரே, ஒருங்கிணைந்த அமைப்பில் ஒன்றிணைப்பதற்காக வடிவமைக்கப் பட்ட ஒரு பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்புத் திட்டமாகும்.
பல்வேறு நீதிமன்ற அடுக்குகளின் பதிவுகளை இணைப்பதன் மூலம் தரவுப் பிளவுகளை நீக்கி, அதன்மூலம் நீதித்துறைச் செயல்பாட்டின் வேகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தி, ஒரு திறமையான தேசிய வழக்கு மேலாண்மை அமைப்பை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
‘சு சஹாய்’ என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒருங்கிணைக்கப் பட்ட, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு உதவி உரையாடல் மென்பொருளாகும்.
இது தேசிய தகவல் மையத்தால் (NIC), உச்ச நீதிமன்றப் பதிவகத்துடன் இணைந்து உருவாக்கப் பட்டது.