2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவுகள் ஏற்றுமதி சாதனை அளவாக 8.46 பில்லியன் அமெரிக்க டாலர்களை (₹73,890 கோடி) எட்டியுள்ளது.
இந்த நிதியாண்டில் இந்தியா 19.72 லட்சம் மெட்ரிக் டன் கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
உறைந்த இறால் தொடர்ந்து மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக உள்ளதுடன் இது மொத்த ஏற்றுமதி வருவாயில் 66.52% பங்களிக்கிறது.
அமெரிக்கா தொடர்ந்து இந்திய கடல் உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள அதே வேளையில் சீனாவிற்கான ஏற்றுமதியும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) இந்த ஏற்றுமதித் தரவை 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று வெளியிட்டது.
விசாகப்பட்டினம், ஜவஹர்லால் நேரு துறைமுகம், கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவை முக்கிய ஏற்றுமதித் துறைமுகங்களாகும்.