ஜப்பானிய அறிவியலாளர்கள் கடல்நீரில் மிகவும் விரைவாகக் கரைந்து, எந்தத் தீங்கு விளைவிக்கும் எச்சத்தையும் விட்டு வைக்காத மிகவும் ஒரு புதிய வகை நெகிழியை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புதிய நெகிழி நுண்ணுயிரிகள் ஒரு வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துகின்ற மற்றும் தாவரங்கள் உறிஞ்சும் வகையிலான நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை ஒரு விளைபொருளாக விடுவிக்கிறது.
மனிதர்களுக்கு நச்சுத் தன்மையற்ற இது தீப்பற்றலை எதிர்க்கும் பல திறன்களைக் கொண்டுள்ளதோடு இவை கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில்லை.
இந்தக் கூறுகள் மண்ணை வளப்படுத்தக் கூடியது என்றாலும், அவை கடலோர சுற்றுச் சூழல் அமைப்புகளை ஊட்டச் சத்துக்களால் நிறைக்கக் கூடும்.