கர்நாடக அரசு, பள்ளி சீருடைகள் தொடர்பான தனது 2022 பிப்ரவரி மாத உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.
அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் முன்-பல்கலைக்கழகக் கல்லூரிகளில், மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளுடன், வரையறுக்கப் பட்ட அளவிலான பாரம்பரிய மற்றும் மதம் சார்ந்த சின்னங்களை அணிய அனுமதிக்கும் புதிய வழி காட்டுதல்களை அது வெளியிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சமத்துவம், கண்ணியம், சகோதரத்துவம், ஒழுக்கம், மதச்சார்பின்மை, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இடங்கள் என்று அது கூறியுள்ளது.
கல்வி நிறுவன சீருடையுடன் மாணவர்கள் ஹிஜாப் அல்லது தலை முக்காடு, தலைப்பாகை, சிவதாரம், பூணூல் மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றை அணிய இது அனுமதிக்கிறது.
ஆனால், அவை ஒழுக்கம், பாதுகாப்பு அல்லது மாணவர் அடையாளத்திற்கு இடையூறு விளைவிக்காத வரையில் மட்டுமே ஆகும்.
அதே சமயம், எந்தவொரு மாணவரையும் அத்தகைய சின்னங்களை அணியவோ அல்லது அகற்றவோ கட்டாயப்படுத்த முடியாது.