கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் தடுப்பூசியின் உற்பத்தியானது, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்பட உள்ளது.
இதற்கு நாற்கர இணைப்புத் திறன் கொண்ட மனித பாப்பிலோமா (HPV)- "செர்வாவாக்" தடுப்பூசி என பெயரிடப்பட்டு, இது இந்திய சீரம் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக இந்த தடுப்பூசி அறிவிக்கப்பட்டது.
'செர்வாவாக்' என்பது, இந்திய சீரம் நிறுவனத்தின் ஆதரவுடன், பில் அண்ட் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடனான DBT மற்றும் BIRAC ஆகியவற்றின் கூட்டுழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டது.
'கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா' என்ற அதன் கூட்டணி திட்டத்தின் மூலம் இந்த நாற்கர இணைப்புத் திறன் கொண்ட தடுப்பூசியானது உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.