ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ள காமன்வெல்த் போர்க் கல்லறை ஆணையம் ஆனது அசாதாரண அம்சங்களுடன் கூடிய ஐந்து தளங்களைப் பட்டியலிட்டுள்ளது.
இந்தத் தளங்கள் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருடன் தொடர்பு கொண்டு உள்ளவை ஆகும்.
அவற்றில் நாகாலாந்தின் கோஹிமா போர் மயானமும் (கல்லறை) ஒன்றாகும்.
கோஹிமா போர்க் கல்லறை என்பது இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொஹிமாவில் உயிரிழந்த நேச நாட்டுப் படைகளின் 2வது பிரிட்டிஷ் படைப் பிரிவின் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவு இடமாகும்.
காமன்வெல்த் போர்க் கல்லறை ஆணையம் போர்களில் உயிரிழந்த ஆண்களும் பெண்களும் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள் என்பதைப் பறை சாற்றும் ஆறு உறுப்பு நாடுகளின் அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
இந்த ஆணையத்தில் ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.