கியாசானூர் வன நோயினை விரைவில் கண்டறிவதற்கான ஒரு அதிக உணர் திறனுடைய, நோயாளியை வைத்திருக்கும் இடத்திலேயே (Point of Care) சோதனை செய்யும் ஒரு புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
இந்த வகை பரிசோதனை முறையானது இந்திய மருத்துவக் கழகத்தின் தேசிய நச்சுயிரியல் கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முறையானது குரங்குக் காய்ச்சல் எனப்படும் கியாசானூர் வனநோயைக் கண்டறியவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு ஒட்டுண்ணியால் (ticks) உண்டாகக் கூடிய இரத்த இழப்பினை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் நோயாகும்.
இது ஃபிளாவிவிரிடே (Flaviviridae) எனும் குடும்பத்தைச் சேர்ந்த வைரசினால் உண்டாக்கப் படுகிறது.
பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது.