TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் காவல்துறைப் பதக்கங்கள்

August 18 , 2022 1078 days 494 0
  • 2022 ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று, 1082 காவல்துறைப் பணியாளர்கள் காவல் துறைப் பதக்கங்களைப் பெற்றனர்.
  • அவர்களுள் 347 காவல்துறையினர் வீரதீரச் செயல்களுக்கானப் பதக்கத்தினையும், 87 நபர்கள் சிறப்பாகப் பணியாற்றியதற்கான காவல்துறைப் பதக்கத்தினையும், 648 பணியாளர்கள் மகத்தானச் சேவைக்கானப் பதக்கத்தினையும் பெற்றனர்.
  • இந்த ஆண்டு, ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 109 மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மற்றும் 108 காவல் அதிகாரிகள் வீரதீரப் பணிகளுக்கான காவல்துறை விருதினைப் பெற்றனர்.
  • இவர்களைத் தவிர, 7 காவல்துறை வீரர்கள் சிறந்தச் சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீர்திருத்தச் சேவைப் பதக்கத்தினைப் பெற்றனர்.
  • மகத்தானச் சேவைக்கான சீர்திருத்தச் சேவைப் பதக்கத்தினை 38 வீரர்கள் பெற்றனர்.
  • குடியரசுத் தலைவரின் காவல்துறைப் பதக்கங்கள் என்பது இந்தியாவின் சட்டங்களை அமலாக்கும் துறையினருக்கு வழங்கப்படுகிறது.
  • இந்த விருதானது 1951 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இந்த விருதானது ஆரம்பத்தில், ‘குடியரசுத் தலைவரின் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விருதுகள்’ என்றழைக்கப்பட்டன.
  • வை வீரதீரச் செயல்கள் அல்லது சிறப்பானச் சேவைக்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்