லைபீரியக் கொடியேந்திய MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பலானது, கேரள மாநிலக் கடற்கரையில் கவிழ்ந்தது.
இது டீசல், உலை எண்ணெய் மற்றும் கால்சியம் கார்பைடு போன்ற ஆபத்தானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலாகும்.
விக்ரம், சாக்சம் மற்றும் சமர்த் ஆகிய மூன்று கடலோரக் காவல்படைக் கப்பல்கள், இப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டைக் கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளன.
கால்சியம் கார்பைடு ஆனது தண்ணீருடன் வினை புரியும் போது, அது அதிகளவில் வெப்பம் உமிழும் வினைக்கு உட்படுவதால், இது அசிட்டிலீன் வாயு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடை உருவாக்குகிறது.
இந்த வினையின் போது வெளியிடப்படும் வெப்பம் குறைவாக இருந்தாலும், அதனை அடுத்து உருவாகும் அசிட்டிலீன் வாயு விரைவில் எரியக்கூடிய தன்மை உடையது.
இதில் உற்பத்தி செய்யப்படும் கால்சியம் ஹைட்ராக்சைடு ஆனது அந்த நீரின் காரத் தன்மையை அதிகரித்து, நீரின் pH அளவை மாற்றுவதன் மூலம் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சீர்குலைக்கிறது.