TNPSC Thervupettagam

கொவேக்சின் (COVAXIN)

December 12 , 2020 1623 days 569 0
  • பாரத் பயோடெக் நிறுவனமானது தனது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட கோவிட்- 19 தடுப்பு மருந்தான “கோவாக்ஸின்” என்பதற்காக இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டகத்திடம் (DGCI - Drugs Controller General of India) நெருக்கடி காலப் பயன்பாட்டு ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது.
  • இந்த நடவடிக்கைகளின் மூலம், பைசர் மற்றும் சீரம் இந்திய நிறுவனம் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் நெருக்கடி காலப் பயன்பாட்டிற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பித்த மூன்றாவது நோய்த் தடுப்பு நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஆகும்.  
  • கோவேக்ஸின் ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • ஐக்கியப் பேரரசு மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றில் ஒப்புதல் பெற்ற பின்பு இந்தியாவில் அதற்காக விண்ணப்பித்த முதலாவது நிறுவனம் பைசர் (இந்தியா) ஆகும்.
  • நெருக்கடி காலப் பயன்பாட்டிற்காக விண்ணப்பித்த இரண்டாவது நிறுவனம் சீரம் இந்தியா என்ற ஒரு நிறுவனமாகும்.
  • சீரம் இந்தியா என்ற நிறுவனமானது கோவிட்ஷீல்டு நோய்த் தடுப்பு மருந்தின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது.
  • இது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா ஆகியவற்றினால் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்