பிப்ரவரி 2026 இல் மக்களவை ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
சபாநாயகரை நீக்குவதற்கு, சரத்து 94 இன் படி, குறைந்தது 50 உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்பையும், வாக்களிப்பதற்கு முன் சுமார் 14 நாள் அறிவிப்பு காலத்தையும் வழங்க வேண்டும்.
இந்த நடைமுறை மக்களவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதிகள் 200A ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
சபாநாயகர் மீது குற்றச்சாட்டு இருப்பதால், தீர்மானத்தின் ஏற்புத்தன்மையை அவர் தீர்மானிக்க முடியாது.
துணை சபாநாயகர் பதவி என்பது அரசியலமைப்பின் 93வது பிரிவின்படி கட்டாய ஏற்பாடாகும்.
துணை சபாநாயகர் இல்லை என்பதால் சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானத்தில், சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்க முடியாது.
ஆனால் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் இல்லாதபோது அவைக்கு தலைவர் குழு உறுப்பினர் தலைமை தாங்குவார்.
சபையின் அப்போதைய அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப் பட்டால், சபாநாயகர் பதவி விலக வேண்டும்.