2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தால் இந்தக் குழு உருவாக்கப் பட்டது.
ஹிண்டன்பர்க் மீதான அறிக்கையை அடுத்து, அதானி குழுமத்தின் பங்குப் பத்திரச் சட்டத்தின் விதிமுறை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆவர்.
இந்த அறிக்கையானது அதானி குழுமத்தில் உள்ள அனைத்து ஆதாயம் பெறும் உரிமையாளர்களையும் பற்றி குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆதாயம் பெறும் உரிமையாளர்களின் கருத்துக்களை செபி நிராகரித்ததாக என்று எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லை.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானியின் சில்லறைப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.
தற்போதுள்ள விதிகள் அல்லது இந்தச் சட்டத்தில் மீறல்கள் எதுவும் முதல் கட்டத்தில் கண்டறியப் படவில்லை என்று இந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.