எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா தொடர்பான நோய்க் குறிகாட்டிகளில் மிகவும் ஏழ்மையான, குறைந்த கல்வியறிவு மற்றும் கிராமப்புற துணைக் குழுக்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.
இந்த அறிக்கை 186 நாடுகளில் இருந்து 32 சுகாதாரக் குறிகாட்டிகளைக் கொண்டு அதனை ஆராய்கிறது.
காசநோய், எச்ஐவி மற்றும் மலேரியாவின் பரவலில் ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதன் தாக்கத்தையும் இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2019 மற்றும் 2020 ஆண்டுக்கு இடையில் 25 சதவிகிதம் "காசநோய்க்கான வருடாந்திர நிலையில் மிகப்பெரிய குறைப்பு" என்பதை நிகழ்த்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
உலகில் மொத்த காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 26.2 சதவீததத்தினைக் கொண்டுள்ளது.
காசநோய்க்கு எதிரான BCG தடுப்பூசியில் கல்வி தொடர்பான ஏற்றத் தாழ்வுகளை வெகுவாக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.