'சமயம் மற்றும் மொழியினச் சமூகங்களின் சிறுபான்மையினர் அந்தஸ்து ஆனது "மாநில அரசைச் சார்ந்தது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஒருவர் தனது சொந்த மாநிலத்திற்கு வெளியே சிறுபான்மையினராக இருக்கலாம்.
முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பாரசீகர்கள் ஆகிய இனத்தவர் 1992 ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கானத் தேசிய ஆணையச் சட்டத்தின் 2 (c) என்ற பிரிவின் கீழ் சிறுபான்மைச் சமூகங்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் சதவீதம் சுமார் 19.3% ஆகும்.
ஒரு சமூகத்தைச் சிறுபான்மையினராக அறிவிப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு சட்டப் பூர்வமான அதிகாரமும், மத்திய அரசிற்கு நிர்வாக அதிகாரமும் உள்ளது.