TNPSC Thervupettagam

சமுத்திரா மைத்ரி நடவடிக்கை

October 5 , 2018 2462 days 743 0
  • இந்தோனேசியாவில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய மனிதாபிமான சமுத்திரா மைத்ரி நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலிருந்து 2 விமானங்கள் மற்றும் 3 கடற்படைக் கப்பல்கள் ஆகியவை நிவாரணப் பொருள்கள் மற்றும் பணியாளர்களுடன் அனுப்பப்பட்டுள்ளது.
    • C - 130J மற்றும் C - 17 விமானங்கள்
    • INS திர், INS சுஜாதா மற்றும் INS ஷர்துல்
  • 2018 செப்டம்பர் 28 அன்று இந்தோனோசியாவில் உள்ள மினஹாசா தீபகற்பத்தின் கழுத்துப் பகுதியை 7.5 ரிக்டர் அளவிலான ஆழமற்ற பூகம்பமானது தாக்கியது.
  • இந்த பூகம்பத்தின் வெளிப்படும் இடமானது (epi centre) மத்திய சுலோவேசியின் மலைப் பிரதேசமான டோங்க்கலா ஆட்சி பகுதியில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து தலைநகரான பாலு வட்டாரப் பகுதியை சுனாமி தாக்கியது.
  • 2006-ல் இந்தோனோசியாவில் ஏற்பட்ட யோக்யகர்த்தா பூகம்பத்திற்குப் பிறகு ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்