TNPSC Thervupettagam

சரத்து 21ன் கீழ் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான உரிமை

April 28 , 2026 4 days 92 0
  • தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகப் பயணம் செய்வது, அரசியலமைப்புச் சரத்து 21-இன் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • சாலைப் பாதுகாப்பு என்பது வெறும் நிர்வாகப் பிரச்சினை மட்டுமல்ல, அது அரசின் அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த கடமை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலைகள் மொத்த சாலைகளில் சுமார் 2% மட்டுமே இருந்தாலும், சாலை விபத்து இறப்புகளில் கிட்டத்தட்ட 30% இங்குதான் நிகழ்கின்றன.
  • விபத்துகளைக் குறைப்பதற்காக, நெடுஞ்சாலை நிலங்களில் உள்ள அங்கீகாரமற்ற தாபாக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் தடை செய்துள்ளது.
  • முறையான வசதிகளுடன் கூடிய குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • மேலும், சிறப்பான கண்காணிப்பு, ரோந்துப் பணிகள் மற்றும் விரைவான நடவடிக்கைக்கு ஆம்புலன்ஸ் போன்ற அவசரகாலச் சேவைகளை மேம்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்