சிலிக்கா நீர்ப்பறவை நிலை அறிக்கை – 2022
January 8 , 2022
1220 days
527
- ஒடிசா மாநில வனவிலங்கு அமைப்பானது சமீபத்தில் சிலிக்கா ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டது.
- சிலிக்கா மேம்பாட்டு ஆணையம் மற்றும் மும்பை இயற்கை வரலாற்றுச் சமூக அமைப்பு ஆகியவையும் இந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டன.
- சிலிக்கா ஏரியானது மிகப்பெரிய உவர்நீர் ஏரியாகும்.
- இந்த ஏரியில் பெருமளவில் காணப்படும் பறவை இனங்களான ஊசிவால் வாத்து, நாமத்தலை வாத்து மற்றும் கருவால் வாத்து ஆகியவை ஒரு லட்சம் எண்ணிக்கையில் இங்கு உள்ளன.
- 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், பெரும் பூநாரைகளின் எண்ணிக்கையானது 10 வருடங்களில் இல்லாத அளவில் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது.
- நலபனா பகுதியில் சேற்றுநிலங்களை மறுசீரமைப்புச் செய்ததே இதற்கான முக்கியக் காரணமாகும்.

Post Views:
527