மத்திய அரசானது தடையற்ற வாகன இயக்கத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுங்கக் கட்டண வசூலிப்பிற்காக புவியிடங் காட்டியை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்தியாவை ”சுங்க சாவடித் தடையற்றதாக” மாற்றும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
புவியிடங்காட்டியை அடிப்படையாகக் கொண்ட சுங்கக் கட்டண வசூலிப்பு முறையின் கீழ் வாகனங்களின் இயக்கங்களின் அடிப்படையில் சுங்கக் கட்டணமானது குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.