TNPSC Thervupettagam
June 10 , 2026 4 days 76 0
  • அரசியலமைப்பு நிபுணரும் முன்னாள் மக்களவை பொதுச் செயலாளருமான சுபாஷ் சி. காஷ்யப் தனது 97-வது வயதில் காலமானார்.
  • இவர் 1983 முதல் 1990 ஆம் ஆண்டு வரை மக்களவை பொதுச் செயலாளராக பணி ஆற்றினார் மற்றும் 37 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் பணி புரிந்துள்ளார்.
  • ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த உயர்மட்டக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார்.
  • அரசியலமைப்பு, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் குறித்து 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
  • பொது வாழ்க்கை மற்றும் அரசியலமைப்பு ஆய்வுகளுக்கான இவரது பங்களிப்பைப் பாராட்டி இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்