ஜல் ஜீவன் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான தரவரிசையில் உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்கள் மிகச் சிறப்பான செயல்திறன் கொண்டவையாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
முன்னணியில் உள்ள மாவட்டங்களில் அம்பாலா, ரோஹ்தக் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்தன.
உயர் சாதனையாளர் பிரிவில் ராணிப்பேட்டை 3வது இடம் பெற்றது.
சாதனையாளர் பிரிவில் மயிலாடுதுறைக்கு 3வது இடம் கிடைத்தது.
உயர் சாதனையாளர்களாக முன்னேறும் மாவட்டங்களில் நாமக்கல் முதலிடம் பெற்றது.
சிறந்த செயல்திறன் கொண்ட மாவட்டங்களின் பிரிவுகளில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்கள்: மோன் (நாகாலாந்து), கிழக்கு ஜெயிந்தியா மலைப் பகுதிகள் (மேகாலயா) மற்றும் மஹோபா (உத்தரப் பிரதேசம்) ஆகியனவாகும்.