இத்திட்டமானது 2024 ஆம் ஆண்டிற்குள், செயல்பாட்டில் உள்ள வீட்டுக் குழாய் இணைப்புகளை நிறுவுவதன் மூலம் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இத்திட்டமானது 17 சதவீத நிறைவில் இருந்து, 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்களைச் சென்றடைந்துள்ளது.
குழாய் இணைப்புகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தச் செய்வதற்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் சுமார் 1.4 மில்லியன் நீர் ஊற்றுப் படுகைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன.
ஹரியானா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்களும் இந்தத் திட்டத்தை நிறைவு செய்து விட்டதாக அறிவித்துள்ளன.