January 22 , 2026
4 days
76
- நடிகர் கமல்ஹாசன் தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
- அவர் தெரியாத நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையான ஜான் டோ வழக்கைத் தாக்கல் செய்தார்.
- தாக்கல் செய்யும் நேரத்தில் உரிமை மீறுபவர்களின் அடையாளம் தெரியாதபோது ஜான் டோ வழக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்த வழக்கு அவரது பெயர், முதலெழுத்துக்கள் (KH), படம், ஒப்புரு மற்றும் தலைப்புகளின் அங்கீகரிக்கப்படாத வணிகப் பயன்பாட்டை நிறுத்த முயல்கிறது.
- இது செயற்கை நுண்ணறிவு (AI), மறைபோலிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் தவறாகப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது.
- ஆளுமை உரிமைகள் ஒரு தனிநபரின் அடையாளம், உருவம் மற்றும் நற்பெயரை அங்கீகரிக்கப்படாதப் பயன்பாட்டிலிருந்துப் பாதுகாக்கின்றன.
Post Views:
76