TNPSC Thervupettagam

டாக்டர் பி. வரதராஜுலு நினைவிடம்

June 4 , 2026 9 days 139 0
  • சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான டாக்டர் பி. வரதராஜுலுவைக் கௌரவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உரிய நினைவிடம் அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. 
  • ஒரு சுதந்திரப் போராட்ட வீரரான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர்; இவர் "தென்னிந்தியாவின் பால கங்காதர திலகர்" என்று பிரபலமாக அறியப் பட்டார்.
  • மகாராஷ்டிராவின் பால கங்காதர திலகரைப் போலவே, நாயுடுவும் திரு.வி. கல்யாண சுந்தரம் மற்றும் ஈ.வெ. ராமசாமி ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய அரசியல் மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
  • இவர் 'பிரபஞ்சமித்திரன்' மற்றும் 'தமிழ்நாடு' ஆகிய தமிழ் வார இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார், மேலும் 1932 ஆம் ஆண்டில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளிதழைத் தொடங்கினார்.
  • கேசரியில் எழுதியதற்காக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட திலகரைப் போலவே, நாயுடுவும் 1918 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று மதுரையில் நிலவிய அரசியல் சூழ்நிலை குறித்து ஆற்றிய உரைக்காக தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டார்.
  • சி. ராஜகோபாலாச்சாரியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் (1952-1954), அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பள்ளிக் கல்விக் கொள்கையை நாயுடு கடுமையாக எதிர்த்தார்.
  • வரதராஜுலு நாயுடு தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த சேலத்தில் உள்ள அசோகர் தூணைத் தவிர, அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட பெரிய நினைவிடம் ஏதும் தமிழ்நாட்டில் இல்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்