தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) தனது அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் நாடு தழுவிய 'மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நோயாளிகள் கருத்துப் பதிவு அமைப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு, நோயாளிகளின் கருத்துகளை நிகழ்நேரத்தில் சேகரிப்பதற்கான ஒரு பன்முக டிஜிட்டல் குறைதீர்ப்பு மற்றும் தர-உத்தரவாதத் தளமாகும்.
தானியங்கி முறையில் கருத்துக்களைச் சேகரிப்பதற்காக இது ESIC சுகாதாரத் தகவல் அமைப்பான தன்வந்த்ரி தொகுதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் கிடைக்கும் SMS (குறுஞ்செய்தி சேவை) இணைப்புகள் மற்றும் QR குறியீடுகள் மூலம் நோயாளிகளின் கருத்துகள் பெறப்படுகின்றன.
காப்பீடு செய்யப்பட்ட நபர் (IP) எண் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) சரிபார்ப்பைப் பயன்படுத்தி நோயாளிகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவமனையின் தூய்மை, ஊழியர்களின் நடத்தை மற்றும் மருந்து இருப்பு போன்ற சேவைகளுக்கு நோயாளிகள் மதிப்பீடு வழங்குகின்றனர் மற்றும் குறைந்த மதிப்பீடுகள் பெறப்பட்டால் அது தானாகவே நடவடிக்கைக்காகத் தெரிவிக்கப்படும்.