இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் BCCI ஆகியவை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களை சில குறிப்பிட்டக் கோப்பைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளன.
இங்கிலாந்தில் நடைபெறும் போது இந்தப் போட்டிகள் பட்டோடி கோப்பை என்றும் இந்தியாவில் நடைபெறும் போது அந்தோணி டி மெல்லோ கோப்பை என்றும் அவை அழைக்கப் பட்டன.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளுடன் மிகவும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் முன்னணி வீரராக உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை எடுத்து மிக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையினைக் கொண்டுள்ளார்.