டேபிள்டாப் விமான நிலையங்கள் மற்றும் கோழிக்கோடு நிகழ்வு
August 11 , 2020 1836 days 742 0
சிறப்பு “வந்தே பாரத்” திட்டத்தின் போது இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது கோழிக்கோடு ஓடு தளத்தைத் தாண்டி, ஒரு பள்ளத்திற்குள் விழுந்தது.
2010 ஆம் ஆண்டில், இதே போன்ற ஒரு விபத்தானது மங்களூரு விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
டேபிள்டாப் விமானநிலையம் என்பது மலையின் மேற்பரப்பு அல்லது பீடபூமியின் உச்சியில் கட்டப்பட்டுள்ள ஒரு விமான நிலையமாகும்.
இந்த விமான நிலையங்களின் ஓடுபாதையானது ஒரு முனை அல்லது அதன் இரு முனை ஆகியவற்றில் ஒரு பள்ளத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும்.
சிம்லா மற்றும் குலு (இமாச்சலப் பிரதேசம்), லெங்புய் (மிசோரம்), பாக்யாங் (சிக்கிம்), கோழிக்கோடு மற்றும் கண்ணூர் (கேரளா), மங்களூரு (கர்நாடகா) ஆகியவை இந்தியாவில் உள்ள டேபிள்டாப் விமான நிலையங்களாகும்.
நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் பூடானில் உள்ள பாரோ ஆகியவை இந்தியாவிற்கு வெளியே அமைந்த இதர டேபிள்டாப் விமான நிலையங்களாகும்.