TNPSC Thervupettagam

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகம்

November 14 , 2019 2093 days 724 0
  • இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகமானது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு பொது ஆணையம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்த முக்கியமானத் தீர்ப்பானது இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வினால் அறிவிக்கப்பட்டது.
  • நியமனம் செய்வதற்காக கொலீஜியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை மட்டுமே வெளியிட முடியும் என்றும் அதற்குரிய காரணங்களை வெளியிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.
  • முன்னதாக, 2010 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று, இந்தியத் தலைமை நீதிபதியின் அலுவலகமானது தகவல் அறியும் உரிமை (Right to Information - RTI) சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  • அதன் பின்னர் உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் (central information commission's - CIC's) உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமைச் செயலாளர் மற்றும் அதன் மத்தியப் பொது தகவல் அதிகாரி ஆகியோரால் 2010 ஆம் ஆண்டில்  மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தினை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கையானது தகவல் அறியும் ஆர்வலரான எஸ்.சி.அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்