இந்திய தரைப் படை, கடற்படை மற்றும் விமானப் படை மற்றும் இதர துணை ராணுவப் படைகள் ஆகியவற்றின் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘தக்சின் சக்தி’ இராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் நவம்பர் 26 அன்று நிறைவடைந்தது.
இந்தப் பயிற்சியானது நவம்பர் 20 அன்று தொடங்கியது.
ஆயுதப் படைகள், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பிரிவுகளிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினை நிறுவுவதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.