மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்களுடன் இணைந்து சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் (சுமன்) என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
சுமன் என்ற முன்னெடுப்பானது தடுக்கக்கூடிய, தாய் & புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புகளை சுழிய நிலைக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பொது சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் சேவைகள் மறுக்கப்படுவதை சுழிய அளவிற்குத் தடுத்தல் மற்றும் எந்தவொரு கட்டணமுமின்றி கண்ணியமான, மரியாதைக்குரிய & தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முயற்சிக்கின்றது.
இந்தத் திட்டத்தின் மூலம் பொது சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்களுக்கு இலவசப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற வசதிகள் வழங்கப்படும்.
இதன் மூலம் பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்கள் வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு இலவச சுகாதார நலன்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தினால் புதிதாகப் பிறந்த, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் இலவச சுகாதார நலன்களைப் பெற்றுப் பயனடைவர் .