தனியார் துறையில் இட ஒதுக்கீடு
November 9 , 2020
1663 days
751
- தனியார் துறை வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் ஒரு மசோதாவை ஹரியானா அரசானது நிறைவேற்றியுள்ளது.
- மாதத்திற்கு ரூ.50,000க்கும் குறைவாக ஊதியம் தரும் தனியார் நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.
- ஆயினும், இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 19 என்ற பிரிவுகளை மீறுகிறது.
- இவை சட்டத்தின் முன் சமத்துவத்தையும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எந்தவொரு தொழிலையும் கடைபிடிக்கும் உரிமையையும் வழங்குகின்றன.
- எனவே, இது சட்டமாக மாறுவதற்கு முன்னர் அதற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
Post Views:
751