1967 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆட்சி அமைத்தது.
சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது அதுவே முதல் முறையாகும்.
முன்னதாக 1962 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் சி.என். அண்ணாதுரை அவர்கள், எஸ்.வி. நடேச முதலியாரிடம் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
1967 ஆம் ஆண்டில், அண்ணாதுரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை; மாறாக தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சட்டமன்றத்தில் திமுக அமோக பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, அண்ணாதுரை முதலமைச்சரானார்; பின்னர் சட்ட மேலவை உறுப்பினரானார்.
1967 ஆம் ஆண்டு முதல், எந்த ஒரு தேசியக் கட்சியும் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கவில்லை.