TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி - 1976

February 3 , 2026 14 days 111 0
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, தமிழ்நாட்டு அரசாங்கம் வரலாற்றில் முதல் முறையாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் 356வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
  • அப்போதைய அரசாங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இயங்கியது.
  • மாநில அரசாங்கத்தால் இனி அரசியலமைப்பின்படி செயல்பட முடியாது என்று ஆளுநர் கே. கே. ஷா அளித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த பதவி நீக்கம் நிகழ்ந்தது.
  • 1976 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி முடிவடையவிருந்த அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பே, தமிழ்நாடு சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
  • திமுக அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் குறித்து ஆளுநர் அறிக்கை அளித்தார்.
  • அதிக சுயாட்சி கோரும் போர்வையில் பிரிவினைவாத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக அந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
  • 14 நாட்களுக்குக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குத் தடை விதித்து சென்னையில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் இந்தப் பதவி நீக்கத்தை ஆதரித்ததுடன், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரினார்.
  • கருணாநிதி மற்றும் சில திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ். சர்க்காரியாவை ஒரு நபர் விசாரணை ஆணையமாக மத்திய அரசு நியமித்தது.
  • மாநிலத்தை நிர்வகிக்க ஆளுநருக்கு உதவுவதற்காக, பி. கே. தவே மற்றும் ஆர். வி. சுப்பிரமணியன் ஆகிய இரண்டு மத்திய அரசு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்து, முறையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்