TNPSC Thervupettagam

தர்பார் நகர்வு - காஷ்மீர்

May 7 , 2019 2210 days 852 0
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமைச் செயலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் ஆகியவை ஸ்ரீநகரில் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.
  • ஜம்மு காஷ்மீரின் கோடைக் காலத் தலைநகர் ஸ்ரீநகர் ஆகும். இது மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கோடைக் காலத் தலைநகராக விளங்கும்.
  • நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஜம்மு காஷ்மீரின் குளிர்காலத் தலைநகர் ஜம்மு ஆகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு முறை நடைபெறும் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகியவற்றிற்கிடையேயான தலைநகர் மாற்றமானது “தர்பார் நகர்வு” என்றழைக்கப்படுகின்றது.
  • இது 1872 ஆம் ஆண்டில் தோஹ்ரா அரசர் மஹாராஜா ரன்பீர் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்