TNPSC Thervupettagam

தாதாபாய் நௌரோஜி அவர்களின் 200வது பிறந்தநாள்

December 11 , 2025 15 hrs 0 min 8 0
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியா தாதாபாய் நௌரோஜி அவர்களின் (1825–1917) 200வது பிறந்த நாளைக் கொண்டாடியது.
  • இத்தினம் ஒரு தேசியவாதத் தலைவர், பொருளாதாரச் சிந்தனையாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்ற அவரது பாரம்பரியத்தைக் கௌரவிக்கிறது.
  • அவர் 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் தேதியன்று பம்பாயில் பிறந்தார் மற்றும் எல்பின்ஸ்டன் நிறுவனத்தில் படித்த அவர் பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் முதல் இந்தியப் பேராசிரியரானார்.
  • பிரிட்டிஷ் ஆட்சி ஆனது சம்பளம், ஓய்வூதியம், பணம் அனுப்புதல் மற்றும் சமமற்ற வர்த்தகம் மூலம் இந்தியாவின் வளங்களை எவ்வாறு சுரண்டியது என்பதைக் காட்டும் Drain of Wealth கோட்பாட்டினை நௌரோஜி உருவாக்கினார்.
  • அவர் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) ஸ்தாபன உறுப்பினராக இருந்தார் என்பதோடு அவர் 1886, 1893 மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
  • இவர் 1892 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் (MP) முதல் இந்திய உறுப்பினர் ஆவார்.
  • அவர் சுயராஜ்யம், அரசியலமைப்பு முறைகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்தார் என்பதோடு மேலும் திலகர், கோகலே மற்றும் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார்.
  • நௌரோஜி இலண்டன் இந்தியச் சங்கம் (1865) மற்றும் கிழக்கிந்தியச் சங்கம் (1866) போன்ற அமைப்புகளை இணைந்து நிறுவினார்.
  • அவர் "இந்தியாவின் முதுபெரும் மனிதர்" மற்றும் "இந்தியாவின் அதிகாரப் பூர்வமற்ற தூதர்" என்று நினைவு கூரப்படுகிறார்.
  • அவரது 1906 ஆம் ஆண்டு INC தலைமை உரையே சுயராஜ்ஜியத்தினை ஒரு தேசிய இலக்காக ஏற்றுக் கொண்ட முதல் உரையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்