“பொதுச் சுகாதாரத் திட்டங்களில் பாலூட்டுதல் மேலாண்மை மையங்களை நிறுவுவதற்கான தேசிய வழிகாட்டுதல்கள்” என்பதன் கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் தாய்ப் பால் வங்கிகள் நிறுவப் பட்டுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அல்லது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தானமாக வழங்கப்படும் தாய்ப் பாலைச் சேகரித்தல், சோதனை செய்தல், பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த தாய்ப் பால் வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதலாவது தாய்ப்பால் வங்கியானது 1989 ஆம் ஆண்டில் மும்பையில் நிறுவப் பட்டது.