TNPSC Thervupettagam

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விசாரணை

June 23 , 2026 13 days 122 0
  • திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு மூவர் குழுவை அமைத்துள்ளது.
  • செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட இந்தக் கசிவினால், குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தக் குழுவில் S. ஆனந்த் (தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர்), M. சரவணகுமார் (தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் - TNPCB) மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் கூடுதல் இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • நிறமற்ற, கடுமையான வாசனையுடைய, நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் அரிக்கும் தன்மையுடைய வாயுவான அமோனியா குளிர்பதனப் பெட்டிகள், கடல் உணவு பதப்படுத்துதல் மற்றும் உரத் தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • அதிக அளவிலான அமோனியாவை சுவாசிப்பதால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், மார்பு வலி, தீக்காயங்கள் மற்றும் மூக்கு அல்லது வாயிலிருந்து இரத்தம் கசிதல் ஆகியவை ஏற்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்