மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் & புவி அறிவியல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது திறந்தநிலைப் பாறை அருங்காட்சியகத்தினைத் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 35 வெவ்வேறு வகைப் பாறைகள் காட்சிப் படுத்தப்படுகின்றன.
இந்தப் பாறைகளின் வயதானது சுமார் 3.3 பில்லியன் வருடங்கள் முதல் 55 மில்லியன் வருடங்கள் வரை இருக்கும்.
இந்தப் பாறைகள் புவிப் பரப்பிலிருந்து 174 கி.மீ. ஆழத்தில் உள்ள புவியின் ஆழமானப் பகுதிகளின் ஒரு பிரதி பிம்பமாக உள்ளன.
இந்த அருங்காட்சியகமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திறக்கப் பட்டுள்ளது.