TNPSC Thervupettagam

பசுமை ஆற்றல் வழித்தடம் – இரண்டாம் கட்டப் பணிகள்

January 9 , 2022 1219 days 1515 0
  • இந்திய அரசானது பசுமை ஆற்றல் வழித்தடக் கட்டமைப்புப் பணியின் 2வது கட்டப் பணிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2வது கட்டப் பணிகளில் 10,750 கி.மீ. தூரத்திற்கு இரயில் போக்குவரத்து வழித்தடங்கள் கட்டமைக்கப்பட்டு அதனுடன் 27,500 மெகா வோல்ட் ஆம்பியர் திறனுள்ள துணைமின் நிலையங்களும் சேர்க்கப்பட உள்ளன.
  • இத்திட்டமானது 7 மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
  • அவையாவன உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியன ஆகும்.
  • பசுமை ஆற்றல் வழித்தடக் கட்டமைப்புப் பணிகளின் இரண்டாம் கட்டப் பணிகள் 2021-22 முதல் 2025-26 வரையில் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டத்திற்கான செலவில் 33% பங்கினை மத்திய அரசு வழங்கும்.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் 450 GW திறனுடைய ஆற்றல் உலைகளை நிறுவ வேண்டும் எனும் இந்தியாவின் இலக்கினை அடைவதற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்