TNPSC Thervupettagam

தூய்மைத் திட்டம் 2025

April 6 , 2025 54 days 179 0
  • மாநிலத்தில் நிலையான கழிவு மேலாண்மைக்காக 'தூய்மைத் திட்டம்' என்ற மாநில அளவிலான திட்டத்தினை உருவாக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • தூய்மையான தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் (CTCL) ஆனது, இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
  • பல துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்போடுச் சேர்த்து, தலைமைத்துவம், கொள்கை வழிகாட்டுதல், கொள்கை வடிவமைப்பு மற்றும் ஒப்புதல் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை இந்தத் திட்டம் வழங்கும்.
  • இதில் மாநில அளவிலான நிர்வாகக் குழுவின் ஒரு தலைவராக தலைமைச் செயலாளர் செயல்படுவார்.
  • இதில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான தூய்மைக் குழுவானது இடைநிலை நிர்வாக அலகாகச் செயல்படும்.
  • இதில் தொகுதி அளவிலான / நகர்ப்புற உள்ளாட்சி அளவிலான ஒரு தூய்மைக் குழுவும் நியமிக்கப்படும்.
  • தற்போது கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் (CTCL) என்ற நிறுவனமானது ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ளது.
  • இது சிறப்புத் திட்ட அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்