ரேபிஸ் (வெறிநாய் கடியால் ஏற்படும் நோய்) தாக்கிய, குணப்படுத்த முடியாத நோய் வாய்ப்பட்ட அல்லது மிகவும் ஆபத்தான தெரு நாய்களுக்கு எதிராக, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகள் 2023-இன் கீழ், கருணைக்கொலை உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசியலமைப்பின் 21-வது சரத்தானது, தெருநாய் தாக்குதல்களில் இருந்து குடி மக்களின் வாழ்வதற்கான உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று நீதிமன்றம் கூறியது.
பொது இடங்களில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் உரிமையை சரத்து 19(1)(d) குடிமக்களுக்கு வழங்குகிறது என்றும் அது குறிப்பிட்டது.
ஒவ்வொரு மாநிலமும் ஒன்றியப் பிரதேசமும், பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவப் பணியாளர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) மையத்தையாவது அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோகுளோபுலின் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகள் 2023, ரேபிஸ் தாக்கிய, இறக்கும் தருவாயில் உள்ள அல்லது ஆபத்தான முறையில் காயமடைந்த நாய்களை மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கிறது.