இந்திய தேர்தல் ஆணையமானது தெலுங்கானாவில் தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையமானது தற்போதுள்ள பொறுப்பு அரசாங்கமானது எந்தவொரு பெரிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் தடைவி தித்துள்ளது.
முன்கூட்டியே சட்டசபை கலைக்கப்படும் மாநிலங்களில் மத்திய மற்றும் அரசாங்கங்கள் புதிய திட்டங்களை அறிவிப்பதை தடுப்பதற்காக உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையமானது அறிவித்துள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாமலேயே ஒரு மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் ஆட்சிக் காலம் உள்ள போதிலும் செப்டம்பர் மாதம் தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது.