நிலத்தடி நீர் நிறுவனங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசியத் திட்டத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கியும் இந்திய அரசும் இணைந்து கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
தேசிய நிலத்தடி நீர் மேலாண்மை மேம்பாட்டுத் திட்டமானது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இது மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் உலக வங்கியானது நிலத்தடி நீரை நீடித்த முறையில் நிர்வகிப்பதற்காக ரூ. 6,000 கோடியை வழங்க இருக்கின்றது.
இந்தத் திட்டமானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகின்றது.