அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் புவி அறிவியல் அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் அவர்கள் சமீபத்தில் CEPI (Coalition for Epidemic Preparedness Innovations) ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.
CEPI ஆய்வகத்தின் மையப்படுத்தப்பட்ட வலையமைப்பு ஆய்வகங்களாக உலகளவில் நிறுவப்பட்டுள்ள ஏழு ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள Translational Health Science & Technology Institute' என்ற நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் இந்த ஆய்வகம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அனைத்து கோவிட் - 19 தடுப்பூசி உருவாக்குநர்களும் இந்த அமைப்பைத் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் நோயெதிர்ப்புத் திறனை மதிப்பிடுவதற்கு வேண்டி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
CEPI என்பது சமுதாய அக்கறை கொண்ட பொது, தனியார் மற்றும் குடிமை அமைப்புகளுக்கிடையேயான ஒரு புதுமையான கூட்டாண்மை ஆகும்.
இது எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளை உருவாக்கிட வேண்டி 2017 ஆம் ஆண்டில் டாவோஸில் தொடங்கப்பட்டது.