இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘தோஸ்தி’ எனப்படும் 15வது முத்தரப்பு கடலோரக் காவற்படைப் பயிற்சியை மாலத்தீவில் மேற்கொள்கின்றன.
2021 ஆம் ஆண்டானது தோஸ்தி என்ற முத்தரப்பு கடலோரக் காவற்படைப் பயிற்சியின் 30வது ஆண்டு நிறைவாகும்.
இந்தியக் கடலோரக் காவற்படைக் கப்பல்களான ஐ.சி.ஜி.எஸ். அபூர்வா மற்றும் ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா ஆகியவை எஸ்.எல்.சி.ஜி.எஸ். சுரக்சா எனும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் இணைந்து இப்பயிற்சியில் ஈடுபட்டன.