TNPSC Thervupettagam

நாடு முடக்கம் (ஊரடங்கு) நீட்டிப்பு

April 16 , 2020 1946 days 735 0
  • இந்தியப் பிரதமர் கொரானா வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்காக “சப்தபதி” என்ற  ஒன்றை அறிவித்துள்ளார்.
  • சப்தபதி என்பது கொரானா வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட 7 மந்திரங்களாகும்.
  • தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது ஊரடங்கை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன. 
  • அதே சமயத்தில், மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. 
  • பொது மக்களுக்கான சட்டம் ஒழுங்கானது மாநிலப் பட்டியலில் உள்ளது. இதனைச் செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது.
  • எனவே, மாநில அரசுகள் ஊரடங்கிற்கு வெவ்வேறு தேதிகளை அறிவித்துள்ளன.
  • இருப்பினும், மத்திய அரசானது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கை அறிவித்துள்ளது.
  • இதனைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசானது கோவிட் – 19 தொற்றை “அறிவிக்கப்பட்ட ஒரு பேரிடராக” அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்