நிணநீர் யானைக்கால் நோய் (யானைக்கால் நோய்) பற்றிய தேசியக் கருத்தரங்கு
November 5 , 2019 2102 days 766 0
“யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக ஒன்றிணைதல்” என்ற கருப்பொருள் கொண்ட ஒரு தேசியக் கருத்தரங்கானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனால் தொடங்கி வைக்கப் பட்டது.
மேலும் ‘2021 ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மீதான அழைப்பிலும்’ மத்திய அமைச்சர் கையெழுத்திட்டார்.
நிணநீர் யானைக்கால் நோயானது பொதுவாக யானைக்கால் நோய் என்று அழைக்கப் படுகின்றது. இது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகக் கருதப் படுகின்றது.
இது ஒரு நோய்ப் பரப்பியின் மூலம் பரவும் நோயாகும். இது ஃபிலாரியோடிடியா குடும்பத்தைச் சேர்ந்த உருளைப் புழுக்கள் என வகைப்படுத்தப்பட்ட ஒட்டுண்ணிகளின் தொற்று காரணமாக ஏற்படுகிறது.