நிதி ஆயோக் அமைப்பானது 2019-20 ஆம் ஆண்டிற்கான 4வது மாநில சுகாதாரக் குறியீட்டினை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று வெளியிட்டது.
"வளமான மாநிலங்கள், முன்னேறுகின்ற இந்தியா" என்ற தலைப்பிலான இந்த ஒரு அறிக்கையானது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் அவற்றின் ஒட்டு மொத்த நிலைகளில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் செயல் திறனின் அடிப்படையில் அவற்றைத் தரவரிசைப்படுத்துகிறது.
சுகாதாரக் குறியீட்டின் பெரிய மாநிலங்கள் பிரிவில் கேரளா தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள அதே சமயம் உத்தரப் பிரதேசம் இதில் மிக மோசமான நிலையில் உள்ளது.
தமிழக மாநிலம் 72.42 மதிப்பெண்கள் பெற்று இதில் இரண்டாம் இடத்தில் உள்ளது
சுகாதாரக் குறியீட்டின் சிறிய மாநிலங்கள் பிரிவில் மிசோரம் முதலிடத்திலும், நாகாலாந்து கடைசி இடத்திலும் உள்ளது.
ஒன்றியப் பிரதேசங்களில், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகியவை முதலிடத்திலும், அந்தமான் & நிக்கோபார் கடைசி இடத்திலும் உள்ளது.